Nanjilnattuvellar

சங்கத்தின் பயணப்பாதையில்

நமது கன்னியாகுமரி வெள்ளாளர் சங்கமானது பிற மாவட்டங்களில் வாழ்கின்ற குமரி மாவட்ட வெள்ளாளர் பெருங்குடி மக்களின் பொருளாதார கலாச்சார, கல்வி மேம்பாட்டிற்கென ஓர் அமைப்பு வேண்டுமென்பது நமது சமுதாய மக்களின் நெடு நாளைய நோக்கம். 1976 டிசம்பர் 12ம் தேதி ‘நாஞ்சில் வெள்ளாளர் சங்கம்” தொடங்கப்பட்டபோது அந்த எண்ணம் நிறைவேறியது. இதன் முதல் தலைவராக டாக்டர் கே.எம்.பிள்ளை, செயலாளராக திரு.எம்.சுவாமிநாத பிள்ளை என்ற காந்தி பொருளாளராக திரு.பி.சி.பிள்ளை தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் ‘நாஞ்சில் வெள்ளாளர் சங்கம்” என்ற பெயரினை ‘கன்னியாகுமரி வெள்ளாளர் சங்கம்” என்று மாற்ற வேண்டும் என்று முதல் பொதுக்குழு கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் கொண்டுவந்த பரிந்துரையை பொதுக்குழு ஏற்றுக்கொண்டது.

அன்று முதல் ‘கன்னியாகுமரி வெள்ளாளர் அசோசியேசன்” என பெயர் மாற்றப்பட்டது. 1977-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி நடந்த பேரவைக் கூட்டத்தில் முன்னாள் நீதிபதி எம்.குமாரசுவாமி பிள்ளை தலைவராகவும், செயலாளராக திரு.பி.சி.பிள்ளை மற்றும் துணைத்தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சங்கத்தின் பதிவானது 1977-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 4-ம் தேதி 152/1977 எண்ணில் பதிவு செய்யப்பட்டது.

Latest News & Events

முனைவர் பி. யோகிஸ்வரன் அவர்களின் வாழ்த்துரை

கன்னியாகுமரி வெள்ளாளர் சங்கம் புதிய ஓர் இணையதளம் (website)தொடங்க இருத்தலை அறிந்து மகிழ்கிறேன். அதன்மூலம் சங்கத்திற்கும் சமுதாய மக்களுக்கும் நெருக்கமான தொடர்பு ஏற்படும் ,சங்கத்தின் செயற்பாடுகளும் செய்திகளும் அங்கத்தினர்களைச் சென்று சேரவும் இந்த இணையதளம்

Read More »

நாஞ்சில் மலர் செப்டம்பர் மாத இதழ்

இந்த மாத இதழில், 1.வெங்க மூதிக்குத் தங்கப் பாம்படம் – ஆசிரியர் நாஞ்சில் நாடன். 2.என் மன வாசல் திறக்கட்டும் – மருத்துவர் பூரணலிங்கம் 3.மூலிகை மருத்துவ கோவை – மேனாள் இணைப்பேராசிரியர் உ.

Read More »

ஆயுத பூஜை விழா

  நமது கன்னியாகுமரி வெள்ளாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டமும், ஆயுத பூஜை விழாவும் இன்று(17.10.2021 )காலை 10:30 மணி அளவில் நமது சங்கத்தின் தலைவர் திரு .அ.ஐயப்பன் அவர்கள் தலைமையில் நமது சங்க கட்டடத்தில்

Read More »

Are you Looking to Join as a Member of our Community?